கோடை குவளை…
நாற்சந்தி கூவல் – ௬௫(65)
(தண்ணீர்ப் பதிவு)
கோடை குவளை…
தவிச்ச வாய்க்கு தண்ணீர் கொடுப்பது தமிழர் பண்பாடு. இன்றைய கலாச்சாரத்தில் நாம் இதை செய்ய {வேண்டுமென்றே} மறுக்கிறோம், மறக்கிறோம். மாறுங்கள்…
சுட்டெரிக்கும் கோடை காலம், அக்னி நட்சத்திரம். வெளியில் சென்றால், வெயிலில் நடந்தால், தலை சுத்தும் அளவுக்கு எங்கும் தனியா வெப்பம். ஒதுங்கி நிற்க, நிழல் கொடுக்கக் கூட மரங்கள் இல்லாத அவலம். தண்ணீர் மட்டுமே நமது தோழனாகிறது.
நாம் மட்டும் குடித்து, குளிரிந்து, மகிழ்ந்தால் போதுமா? கொஞ்சம் இறக்கம் கொள்ளுங்கள். மனதின் ஈரத்துடன், பறவைகளின் தாகத்தை தனியிங்கள்.
{ இப்பொழுது தான், எம் வீடு பால்கனியில், ஒரு குவளை தண்ணீர் வைத்து விட்டு வந்து இந்த பதிவை எழுதுகிறேன் }
உங்கள் மனதில் ஒரு சந்தேகம் எழலாம். இந்த ஊரில் குருவிகளோ, கிளிகளோ அல்லது வேறு பறவைகளோ உள்ளனவா? அப்படி இருந்தாலும் இந்த தண்ணீரை தேடி வந்து குடிக்குமா?
கீதையில் ஸ்ரீ கிருஷ்ணர் சொல்லுகிறார் : “வேலையை செய், பலனை எதிர்பார்க்காதே” . இதுதான் கீதா சாரமமும் கூட.
நீங்கள் தண்ணீர் வையுங்கள். மன நிம்மதி, திருப்பதி அடையுங்கள். தினமும் இதே நம்பிக்கையுடன் வையுங்கள் “இதனால், பறவைகள் நன்மை அடையட்டுமாகுக“. நிச்சியம் நீங்கள் வைத்து நீருக்கு ஒரு குருவியேனும் வரும்.
நீங்களும் செய்யுங்கள். நண்பர்களையும் செய்ய சொல்லுங்கள்.
நல்லதை யார் சொன்னாலும் கேட்ப்பது தான் உயர் பண்பு!!!
“லோகா சமஸ்தா சுகினோ பவந்து” – வேதம்
நாற்சந்தி நன்றிகள் : என்னை இப்படி சிந்திக்க தூண்டிய இந்த படம் – ‘பேஸ்புக்’கில் ஒரு நண்பர் பகிர்ந்து கொண்டது. முகவரி