நட்பும் எழுத்துக்களும்
நாற்சந்தி கூவல் – ௬௭ ()
(தமிழ் பதிவு)
நட்பும் எழுத்துக்களும்
சரியா பள்ளிகள் தொடங்கி இருபது நாட்கள் ஆகபோகின்றன. நட்பு என்னும் பூ ஒவ்வொரு வருடமும் பூக்கும் தருணங்கள் பல தாண்டி நம் சிறார்கள் வளர்ந்து வரும் அழகே தனி தான். இதை எல்லாம் பார்க்கும பொழுதும் கடந்து வந்த அந்த சுகமான நாட்கள் மட்டும் நினைவில் தொக்கி நிற்கின்றன.
ஏனடா இந்த பூர்விக பீடிகை என்றால், நானும் (தமிழ்) பாடம் சொல்ல வந்துள்ளேன். இந்த மாதம் ஒன்னான் தேதி மங்களம் பொங்கும் வெள்ளி. ஆனால் தொடர்ந்து வந்த இரண்டு விடுமுறை நாட்களோ, வைத்தியில் புலியை கரைத்து விட்டன. வேறென்ன, குழந்தைகளுக்காக நாம் செய்யும் வீட்டு-பாடம் ஹோம்வொர்க் தான். நட்பு மலர சந்தர்ப்பமே கொடுக்காமல் முதல் நாளே ‘நட்பு எழுத்துகளை’ நடத்தி , அசைன்மென்ட் வேறு 😦
முதலில் நட்பு எழுத்துகள் பற்றி அறிக:
(சமச்சீர் கல்வி தமிழ் புத்தகம் – ஆறாம் வகுப்பு – பக்கம் 10)
நாங்கள் செய்ய வேண்டியது எல்லாம், பத்துக்கும் குறையாமல் ஒவ்வொரு இன எழுத்துக்களுக்கும் எடுத்து காட்டு எழுத வேண்டும். குடும்பமே கூடி அமர்ந்து இந்த விளையாட்டை இனிதே மகிழ்ந்து கழித்து விளையாடினோம்
ங்க
- லிங்கம்
- பங்கம்
- சுரங்கம்
- கவியரங்கம்
- சங்கம்
- மங்களம்
- இருங்கள்
- போங்கள்
- பொங்கல்
- சிற்பங்கள்
- தங்கம்
ஞ்ச
- அஞ்சலி
- சஞ்சலம்
- பஞ்சம்
- லஞ்சம்
- நெஞ்சம்
- கொஞ்சம்
- அஞ்சாதே
- அஞ்சல்
- மிஞ்சி
- கோழிகுஞ்சு
ண்ட
- மண்டலம்
- கண்டம்
- கமண்டலம்
- பூண்டு
- வண்டு
- நண்டு
- வேண்டும்
- கொண்டாட்டம்
- கொண்டை
- சண்டை
ந்த
- நந்தன வருடம்
- நந்தி
- பந்து
- வெந்தயம்
- சந்தை
- தந்தை
- பந்தி
- வேந்து
- வந்து
- நொந்து
- பொந்து
ம்ப
- கொம்பு
- வம்பு
- கும்பம்
- நம்பிக்கை
- விருப்பம்
- இரும்பு
- கரும்பு
- பிரம்பு
- வரம்பு
- தம்பி
- கம்பு
ன்ற
- அன்று
- இன்று
- கன்று
- நன்று
- கொன்று
- வென்று
- ஒன்று
- சென்று
- என்று
- இருக்கின்றோம்
இது போல பல சொற்கள் அகப்பட்டன, ஆறாம் வகுப்பு குழந்தை அறிந்துள்ள தமிழ் சொற்களின் அளவுக்கு எனக்கு தெரிய வில்லையே என்பது ஒரு வருத்தம். ஆனாலும் பரவாயில்லை, நேரம் கிடைக்கும் பொழுது எல்லாம் இது போல எழுதி பார்கிறேன்.
நீங்களும் செய்யுங்கள். நண்பர்களுடன் நட்பாக நட்பு எழுத்துகளை சேர்த்து பாருங்கள். தமிழ் வளரும், நமது தமிழ் அறிவும் வளரும். பகிர்ந்து கொள்ளுகள் தமிழையும் மகிழ்ச்சியும்.
நீங்களும் நானும், நானும் நாற்சந்தியும், நட்பு எழுத்துகள் போல என்றும் பிரியாது, ஒரே இனமாக இருப்போமாகுக. வாழ்கிறது தமிழ்! வளர்கிறது தமிழ்!!!